sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காங்., - எம்.பி., பிரியங்கா சந்தேகம்

/

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காங்., - எம்.பி., பிரியங்கா சந்தேகம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காங்., - எம்.பி., பிரியங்கா சந்தேகம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காங்., - எம்.பி., பிரியங்கா சந்தேகம்

2


ADDED : பிப் 08, 2025 09:21 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:21 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்திருக்கலாம். மஹாராஷ்டிராவில் ஆடிய அதே ஆட்டத்தை, டில்லியிலும் ஆடியுள்ளனர்,'' என காங்கிரஸ் - எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி தெரிவித்தார்.

தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. அக்கட்சியின் வெற்றிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பு மஹாராஷ்டிராவில், இது போன்று நடந்தது. அங்கு ஆடிய ஆட்டத்தை, இப்போது டில்லியிலும் ஆடியுள்ளனர் என, தோன்றுகிறது.

இதுகுறித்து, எங்கள் தலைவர் ராகுல், என்ன சொல்கிறார் என பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:

டில்லி சட்டசபை தேர்தலில், என்ன காரணத்தால் இத்தகைய முடிவு வெளியானது என்பது தெரியவில்லை. இது குறித்து, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசிப்பர். ஒவ்வொரு தேர்தலும் மாறுபட்டதாக இருக்கும்.

கூட்டணி அனைத்து காலங்களிலும், ஒரே விதமாக இருக்காது. லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கும். எங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட, என்ன காரணம் என்பதை, தன்னாய்வு செய்து கொள்வோம். கர்நாடகாவிலும் இது குறித்து ஆலோசிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us