sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு

/

10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு

10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு

10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு


ADDED : டிச 06, 2025 02:28 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்து இருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் 2014-15 முதல் 2024-2025 வரையிலான 10 ஆண்டுகளில் ரயில்வே துறை 5.08 லட்சம் பேர்களை பணியில் அமர்த்தி உள்ளது. இது முந்தைய 2004-05 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் 4.11 லட்சமாக இருந்தது. இது 23.6 சதவிகிதம் அதிகமாகும்.

உதவி லோகோ பைலட்டுகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் சப் -இன்ஸ் பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் ஆட்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

ரயில்வே துறை நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு சவால்களையும் சமாளித்து ஆட்கள் தேர்வை நடத்தி முடித்து உள்ளது. ஆட்கள் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us