sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

14 நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

/

14 நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

14 நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

14 நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!


ADDED : அக் 24, 2024 03:35 PM

Google News

ADDED : அக் 24, 2024 03:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும் 14 நகரங்களில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்திய ரூபாய் மற்றும் பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 6,410 ஈரோ , 3062 அமெரிக்க டாலர், 5 சிங்கப்பூர் டாலர் மற்றும் 2,750 சுவிஸ் பிராங்க்ஸ் உள்ளிட்ட கரன்சிகள் அடங்கும். கடந்த வாரம் ரெய்டு நடந்தது என இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அந்நிய செலாவணி சட்டம்- 1999ன் கீழ் இந்த சோதனை நடத்தினோம். கரன்சிகளுடன் டிஜிட்டல் டிவைசஸ் மற்றும் பல்வேறு முறைகேடான பத்திரங்களை பறிமுதல் செய்தோம்.

பல்வேறு குழுக்கள் ஒன்றாக இணைந்து, மொஹாலி (பஞ்சாப்) புதுடில்லி, நொய்டா, காசியாபாத் (உ.பி) மற்றும் மும்பை (மஹாராஷ்டிரா) உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வியூநவ் மார்க்கெட்டிங் சர்வீஸ் நிறுவனம், வியூநவ் இன்போடெக் நிறுவனம் மற்றும் ஷெ பிடி ரென்டல் நிறுவனம், புள்ளிவிபர சேவை நடவடிக்கையில் உள்ள சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தோம்.

முறைகேடாக வெளிநாட்டு கரன்சிகளை கையாண்டது குறித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us