தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பி.,க்கு அமலாக்கத்துறை சம்மன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பி.,க்கு அமலாக்கத்துறை சம்மன்
ADDED : பிப் 15, 2024 06:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்த மோசடி தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சை திரிணாமுல் காங்., முன்னாள் எம்.பி.,க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை குழு அறிக்கையின்படி திரிணாமுல் காங்., லோக்சபா எம்.பி.யான மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹூவா மொய்த்ரா அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக டில்லி அலுவலகத்திற்கு வரும் பிப்.19-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

