sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை

/

சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை

சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை

சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை

11


ADDED : ஏப் 12, 2025 09:41 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:41 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமலாக்கத்துறை தொடங்கியது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு, 2014ம் ஆண்டில் பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகாரின் பேரில் வந்தது. புகாரில் யங் இந்தியன் நிறுவனம் ஏ.ஜே.எல்.,லின் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்திற்கு மோசடியாக கையகப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சோனியா மற்றும் ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் இன் சொத்துக்கள் அமைந்துள்ள டில்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள சொத்து பதிவாளர்களுக்கு மத்திய புலனாய்வு நிறுவனம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இதன் பேரில், அமலாக்கத் துறை இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த நவம்பர் 2023ல், அமலாக்கத் துறை டில்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும், ரூ.90.2 கோடி மதிப்புள்ள ஏ.ஜே.எல் பங்குகளையும் தற்காலிகமாக பறிமுதல் செய்தது.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் உறுதி அளிக்கப்பட்ட நிலையில், மும்பையின் ஹெரால்ட் ஹவுஸில் உள்ள மூன்று தளங்களில் தற்போது வசித்து வருபவர்களுக்கு தனி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்கால வாடகைக் கொடுப்பனவுகள் அனைத்தையும் நேரடியாக அமலாக்கத் துறையிடம் டிபாசிட் செய்யுமாறு அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண நோட்டீஸ் மற்றும் மோசடி தடுப்புச் சட்டம் கீழ் இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றத் தொடங்கியது.

இந்த நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியின் மேல் நடந்து வரும் விசாரணையில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us