சரத்பவாரின் உறவினர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சரத்பவாரின் உறவினர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
ADDED : ஜன 06, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் கடந்த 2019ம் ஆண்டில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகனும், தற்போதைய துணை முதல்வருமான அஜித் பவார் உள்ளிட்ட 70 பேர், 25,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த கடன் மோசடியில் சரத் பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.,வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி அக்ரோ நிறுவனத்துடன் தொடர்புடைய புனே, பிம்ப்ரி மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.