sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

/

தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

5


ADDED : டிச 15, 2024 11:47 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:47 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரத்தஹள்ளி: தற்கொலை செய்த இன்ஜினியரின் மனைவி, ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். அவரது தாய், சகோதரருடன் சேர்த்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. இவரது மனைவி நிகிதா சிங்கானியா, 32. இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் மகன் உள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூரு, மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக அதுல் சுபாஷ் பணியாற்றினார்.

குடும்ப தகராறில் கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு, அதுல் சுபாஷ் தான் வசித்த வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் 90 நிமிட வீடியோவை, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோரால், தான் சந்தித்த அவமானங்கள், சித்ரவதைகள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.

உத்தர பிரதேச நீதிமன்றங்களில் தன் மீது, மனைவி ஒன்பது பொய் வழக்குகள் போட்டு இருப்பதாகவும், அவற்றில் ஒரு வழக்கை தீர்த்து வைக்க, பெண் நீதிபதி லஞ்சம் கேட்டதாகவும் கூறி இருந்தார். அதுலின் தற்கொலை, நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நிகிதா, நிஷா, அனுராக்கை தேடி, உத்தர பிரதேசத்திற்கு மூன்று தனிப்படை போலீசார் சென்றனர்.

கடந்த 12ம் தேதி இரவு நிஷா, அனுராக் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒரு தனிப்படை போலீசார், பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர்.

தலைமறைவாக இருந்த நிகிதா, நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம், குருகிராமில் கைது செய்யப்பட்டார். நேற்று அவர் பெங்களூரு அழைத்து வரப்பட்டார்.

நிகிதா, நிஷா, அனுராக்கை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

'அஸ்தியை கரைக்க மாட்டோம்'

அதுல் சுபாஷின் தந்தை பவன் குமார் பீஹாரில் வசித்து வருகிறார். அவர் கூறியதாவது:என் மகனை சித்ரவதை செய்து, தற்கொலைக்கு துாண்டியவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். சுபாஷின் மனைவி, மாமியாரை கைது செய்த கர்நாடகா போலீசாருக்கு நன்றி. பணத்துக்காக என் மகனை கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். என் மகன் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவனது அஸ்தியை கரைக்க மாட்டேன். என் பேரன் எங்கிருக்கிறான் என தெரிய வில்லை; உயிருடன் இருக்கிறானா என்பதே சந்தேகமாக உள்ளது. போலீசார், அவனை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us