இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது
இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது
UPDATED : மார் 07, 2024 06:40 AM
ADDED : மார் 07, 2024 03:09 PM

தர்மசாலா: இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்கள் கைப்பற்றினர். முதல்நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்., இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது.
![]() |
![]() |
![]() |
அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினர். பஷீரின் ஒரே ஓவரில் ஜெய்ஸ்வால் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். அரைசதம் கடந்த அவர், 57 ரன்னில் 'ஸ்டம்ப்' அவுட்டானார். ரோகித் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். மறுமுனையில் ரோகித் அரைசதம் கடந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ரோகித் (52), சுப்மன் கில் (26) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தற்போது 83 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி, நாளைய 2ம் நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்குமா என பார்க்கலாம்.



