sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜெய் ஷா இருந்த இடத்தில் தேவஜித்! பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் நியமனம்

/

ஜெய் ஷா இருந்த இடத்தில் தேவஜித்! பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் நியமனம்

ஜெய் ஷா இருந்த இடத்தில் தேவஜித்! பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் நியமனம்

ஜெய் ஷா இருந்த இடத்தில் தேவஜித்! பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் நியமனம்


ADDED : ஜன 12, 2025 03:51 PM

Google News

ADDED : ஜன 12, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளராக மாஜி கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., செயலாளராக பதவி வகித்து வந்த ஜெய் ஷா, ஐ.சி.சி., தலைவர் ஆனார். அதன் பின்னர், அந்த பதவிக்கு இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா செயல்பட்டு வந்தார்.

இந் நிலையில், பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஜித் சைகியா செயலாளராகவும், பொருளாளராக பிரபதேஜ் சிங் பாட்டியாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த பதவிகளுக்கு இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை.

தற்போது புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ள தேவஜித் சைகியா, அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். கர்னல் சி.கே. நாயுடு டிராபி, ரஞ்சி டிராபி ஆகியவற்றில் விளையாடியவர். 1990-91ம் ஆண்டுகளில் 4 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்.

மாஜி கேப்டன் கங்குலியுடன் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடி இருக்கிறார். அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க செயலாளராகவும், கவுகாத்தி விளையாட்டு சங்க பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் முறையாக மாவட்டங்களுக்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டியை நடத்தியதில் பெரும் பங்காற்றியவர்.






      Dinamalar
      Follow us