/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி சென்டர் மீடியன்களை அகற்ற எதிர்பார்ப்பு
/
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி சென்டர் மீடியன்களை அகற்ற எதிர்பார்ப்பு
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி சென்டர் மீடியன்களை அகற்ற எதிர்பார்ப்பு
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி சென்டர் மீடியன்களை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜன 05, 2026 04:39 AM
ஈரோடு: ஈரோடு-சென்னிமலை சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப்பணி நடக்கி-றது. இதன்படி டீசல் லோகோஷெட்டை ஒட்டி தற்போது பணி தொடங்கியுள்ளது.
விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட குழியில் வாகன ஓட்-டிகள், மக்கள் விழாமல் இருக்க பேரிகார்டு வைத்துள்ளனர். குழியால் சாலை குறுகலாகி விட்டது. கனரக வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அதனை தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் பள்ளி வேன், பஸ்கள் அதிகளவில் செல்லும். இதனால் பீக் அவர்சில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதை தவிர்க்க சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வாகன ஓட்டி
கள் கூறியதாவது: சாலை விரிவாக்க பணிநிறைவு பெறும் வரை சென்டர் மீடியன்களை அகற்ற வேண்டும். இதனால் ஆம்புலன்ஸ்-களுக்கு கூட வழி விட முடியாட நிலை காணப்படுகிறது. இவ்-வாறு கூறினர்.

