sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசுக்கு சொந்தமான செயலியை விளம்பரப்படுத்த முயற்சி: ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

/

அரசுக்கு சொந்தமான செயலியை விளம்பரப்படுத்த முயற்சி: ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

அரசுக்கு சொந்தமான செயலியை விளம்பரப்படுத்த முயற்சி: ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

அரசுக்கு சொந்தமான செயலியை விளம்பரப்படுத்த முயற்சி: ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

1


UPDATED : பிப் 12, 2026 12:43 PM

ADDED : பிப் 12, 2026 11:32 AM

Google News

1

UPDATED : பிப் 12, 2026 12:43 PM ADDED : பிப் 12, 2026 11:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: அரசுக்கு சொந்தமான உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், விளம்பரப்படுத்தும் நோக்கில், சமூக ஊடகமான வாட்ஸ் அப் செயலியை ரஷ்யா தடை செய்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'MAX' என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது.

கண்டனம்

இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அரசு தனக்கு சொந்தமான செயலியில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டை தடுக்க முயற்சித்தது. 10 கோடி பேருக்கும் மேற்பட்ட பயனர்கள் தகவல் தொடர்புக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

ரஷ்ய பயனர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம். இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ரோஸ்கோம்நாட்சோர்' கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டெலிகிராமுக்கும்...

அதேபோல் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நிறுவனத்தின் (டெலிகிராம்) நிறுவனர் பாவெல் துரோவ் விமர்சித்தார். அவர், அரசு கட்டுப்பாட்டில் உள்ள செயலிக்கு மாற மக்களை கட்டாயப்படுத்த முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, ரஷ்ய சட்டங்களைப் பின்பற்றாவிட்டால், பல இணைய தளங்கள் தடை செய்யப்படும் என்று ரஷ்யா எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us