sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

/

பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

4


ADDED : ஜன 31, 2025 01:28 PM

Google News

ADDED : ஜன 31, 2025 01:28 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் தான் குற்றவாளி. சி.சி.டி.வி., காட்சி ஆதாரங்கள் உள்ளன என மும்பை போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்து, கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சயீப் அலிகான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், ஷரிபுல் இஸ்லாம், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், வேறொரு பெயரில் நம் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததும், திருடுவதற்காக நடிகர் சயீப் வீட்டுக்குள் அவர் சென்றதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று நடிகர் சயீப் அலி கான் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகை தரவுகளுடன், கைதான ஷரிபுல் இஸ்லாமின் கைரேகை பொருந்திப் போகிறதா என்பதை ஆய்வு செய்ய, அவரது கைரேகை மாதிரிகள், மாநில சி.ஐ.டி., போலீசாருக்கு அனுப்பப்பட்டன. இதற்கிடையே கைரேகை ஒத்துபோகவில்லை என தகவல்கள் பரவியது.

ஷரிபுல் கைது செய்யப்பட்ட பிறகு, வங்க தேசத்தில் உள்ள அவரது தந்தை, 'சி.சி.டி.வி., காட்சிகளில் காணப்பட்ட நபர் தனது மகன் அல்ல. அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என்றார். பல வதந்திகளுக்கு மத்தியில் செய்தியாளர் கூட்டத்தில், மூத்த மும்பை போலீஸ் அதிகாரி பரம்ஜித் தஹியா கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள வங்கதேச நாட்டவருக்கு எதிராக தங்களிடம் போதுமான மற்றும் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் தான் குற்றவாளி என்றார். மேலும் அவர், ஷரிபுல் கை ரேகைகள் ஒத்துபோகவில்லை என்ற கருத்தை நிராகரித்தார்.






      Dinamalar
      Follow us