sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் 50 'சிசேரியன்' செய்த போலி டாக்டர் கைது

/

அசாமில் 50 'சிசேரியன்' செய்த போலி டாக்டர் கைது

அசாமில் 50 'சிசேரியன்' செய்த போலி டாக்டர் கைது

அசாமில் 50 'சிசேரியன்' செய்த போலி டாக்டர் கைது


ADDED : ஆக 06, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: அசாமில், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து, போலி டாக்டர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, ஜனவரியில் சிறப்புக்குழு அமைத்து மாநிலம் முழுதும் ஆய்வு நடத்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, அசாமின் சில்சாரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு டாக்டராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த புலோக் மலகார் மீது சமீபத்தில் புகார் எழுந்தது.

தொடர்ந்து, அவரது சான்றிதழ்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சில்சாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு, 'சிசேரியன்' எனப்படும், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த போது, புலோக் மலகாரை போலீசார் கைது செய்தனர்.

அசாமின் ஸ்ரீபூமி பகுதியைச் சேர்ந்த இவர், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படத்தைப் போல் போலி டாக்டராக நடித்ததுடன், தன் பணிக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புலோக் மலகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.






      Dinamalar
      Follow us