sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

/

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

4


ADDED : ஏப் 05, 2025 04:57 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:57 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: ம.பி., மாநிலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.

ம.பி.,யின் தாமோ மாவட்டத்தில் கிறிஸ்டியன் மிஷினரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் சேர்ந்து பலனடைந்து வந்துள்ளது. இங்கு ஜான் கெம் என்ற பெயரில் இதய அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் என அவர் கூறி வந்துள்ளார். இவர், பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர்களில் ஏழு பேர் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது.

இது குறித்து தொடர்ந்து புகார்கள் வரவே, அந்த மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அ தில், அறுவை சிகிச்சை செய்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பிரிட்டனில் உள்ள டாக்டரை போன்றே போலி ஆவணங்களை அவர் தயார் செய்ததும், போலி டாக்டர் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தீபக் திவாரி என்ற வழக்கறிஞர் கூறியதாவது: அவரிடம் சிகிச்சை பெற சென்ற நோயாளிகளின் உறவினர்களை சந்தித்த போது பல உண்மைகள் வெளியே வந்தது. அவர்கள், சிகிச்சைக்காக உறவினர்களை அழைத்துச் சென்றோம். ஆனால், அவரின் நடவடிக்கையை பார்த்து பயந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றனர். தற்போது அவர், போலி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது. உண்மையான டாக்டர் பிரிட்டனில் உள்ளார். கைது செய்யப்பட்டவர் வேறு நபர். இவருக்கு எதிராக ஐதராபாத்திலும் வழக்கு உள்ளது. அவர் உண்மையான ஆவணங்களை யாரிடமும் காட்டியது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ' இந்த மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பணம் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது முக்கியமான பிரச்னை. பிரச்னை குறித்து நாங்களே எடுத்து விசாரணை செய்து வருகிறோம்,' எனத் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us