sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப தகராறு பெண் மர்மச்சாவு

/

குடும்ப தகராறு பெண் மர்மச்சாவு

குடும்ப தகராறு பெண் மர்மச்சாவு

குடும்ப தகராறு பெண் மர்மச்சாவு


ADDED : நவ 19, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலக்ட்ரானிக் சிட்டி: பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்தார். இதை பற்றி விசாரிக்கும்படி பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் தீபா, 36. இவர் பெங்களூரின், எலக்ட்ரானிக் சிட்டியில் கணவர் சுரேஷுடன் வசித்து வந்தார். சுரேஷ் தச்சு வேலை செய்து வருகிறார். குடும்ப தேவைக்காக இவர் வங்கி மற்றும் தனியாரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் பெற்றிருந்தார். பொருளாதார பிரச்னையால் கடனை அடைக்க முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. நேற்று மதியமும் வழக்கம் போன்று, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. சிறிது நேரத்துக்கு பின், தீபா, துாக்கிட்ட நிலையில் கிடந்தார்.

இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது போன்று தோன்றினாலும், இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தீபாவின் பெற்றோர், எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us