sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

/

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

70


UPDATED : பிப் 13, 2024 05:56 PM

ADDED : பிப் 13, 2024 10:33 AM

Google News

UPDATED : பிப் 13, 2024 05:56 PM ADDED : பிப் 13, 2024 10:33 AM

70


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.



Image 3550023உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப்பில் உள்ள விவசாய சங்கங்கள் வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், ஓய்வூதியம், நில அபகரிப்புக்கு உரிய நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்ல இன்று அழைப்பு விடுத்திருந்தது.

Image 1231454இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, முற்றுகை போராட்டத்துக்காக மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். இதனால் டில்லியில் உள்ள முக்கிய எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பாதைகள் மாற்றி விடப்பட்டதால் , வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Image 1231455டில்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஏதும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் என்னென்ன


* விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்
* குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குதல்
* 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவும், கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்
* 2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல்
* உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் (WTO), பிற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்தும் அரசு விலகுதல்
* விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
* மின்சாரத் திருத்த மசோதா 2020 ரத்து செய்தல்
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் ஆண்டுக்கு 200 (100 நாட்களுக்குப் பதிலாக) நாட்கள் வேலை வாய்ப்பு, தினசரி ஊதியம் ரூ.700 வழங்குதல்



சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்


சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்






      Dinamalar
      Follow us