sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

/

பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்

5


UPDATED : பிப் 16, 2024 11:52 PM

ADDED : பிப் 16, 2024 11:51 PM

Google News

UPDATED : பிப் 16, 2024 11:52 PM ADDED : பிப் 16, 2024 11:51 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமிர்தசரஸ், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் சார்பில், நேற்று நடந்த, 'பாரத் பந்த்' எனப்படும் முழு அடைப்பு போராட்டத்தால், பஞ்சாபில் பஸ்கள் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

இதே போல், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் நடந்தன.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளதால், எல்லைகளுக்கு அருகே விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' என்ற விவசாய சங்கம், நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு பஞ்சாப், உ.பி., - ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் நேற்று பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்களும் இயங்காததால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

பஞ்சாபின் பல்வேறு இடங்களில், சந்தைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பதான்கோட், டர்ன் தரன், பதிண்டா, ஜலந்தர் ஆகிய இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராடினர்.

ஹரியானாவில் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில், விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. உ.பி.,யின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. முசாபர் நகரில் நடந்த போராட்டத்தில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பங்கேற்றார்.

மீண்டும் பேச்சு

விவசாய சங்கப் பிரதிநிதிகளை, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியுஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர், சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்து மூன்றாவது முறையாக பேச்சு நடத்தினர். இதில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்றார். ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், நாளை மீண்டும் விவசாயிகளை சந்தித்து பேச மத்திய அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். விவசாய சங்கத்தினர் அடிக்கடி தங்கள் கோரிக்கைகளை மாற்றுவதால், பேச்சில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.








      Dinamalar
      Follow us