sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரியை சிறைப்பிடித்த விவசாயிகள்

/

அதிகாரியை சிறைப்பிடித்த விவசாயிகள்

அதிகாரியை சிறைப்பிடித்த விவசாயிகள்

அதிகாரியை சிறைப்பிடித்த விவசாயிகள்


ADDED : ஜூலை 17, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருேஷத்ரா:ஹரியானாவில், போதிய அளவில் உரம் கிடைக்காததை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய துறை அதிகாரியை சிறைப்பிடித்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின் குருேஷத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு போதிய அளவில் உரம் கிடைக்கவில்லை என கடந்த சில நாட்களாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று இங்குள்ள விவசாய அலுவலகத்துக்கு சென்ற விவசாயிகள், அங்கிருந்த அதிகாரி பிரதீப் குமாரிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதீப் குமார் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், பிரதீப் குமாரை அலுவலகத்துக்கு வெளியில் இழுத்து வந்து, சாலையில் நிறுத்தினர். ஹிசார் - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து, நீண்ட நேரத்துக்கு பின், பிரதீப் குமாரை விவசாயிகள் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us