sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்

/

அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்

அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்

அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்


ADDED : அக் 05, 2024 04:59 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: ''மாவட்ட அதிகாரிகளுக்கு கொழுப்பு அதிகரித்துள்ளது. என் பேச்சை யாரும் கேட்பது இல்லை,'' என, ஆளந்தா காங்., - எம்.எல்.ஏ.,வும், முதல்வரின் ஆலோசகருமான பி.ஆர்.பாட்டீல் அதிருப்தி தெரிவித்தார்.

கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாவட்டத்தின் எந்த அதிகாரிகளும், எங்கள் பேச்சை கேட்பது இல்லை. மக்களின் பிரச்னைகளிலும் அக்கறை காட்டுவது இல்லை. அடிப்படை வசதிகள் இன்றி, மக்கள் பரிதவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் உட்பட எந்த அதிகாரிகளும் மக்களின் பிரச்னைகளை பொருட்படுத்தவில்லை. அதிகாரிகளுக்கு கொழுப்பு அதிகரித்துள்ளது.

அதிகாரிகளின் செயலால், அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. இதுகுறித்து சிறு பிள்ளைகள் போன்று, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம், நாங்கள் புகார் அளிக்க வேண்டியுள்ளது. இது சரியா?

சில பணிகள் தரமாக நடப்பதில்லை; ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்காதீர்கள் என, நாங்கள் கூறினால், அதிகாரிகள் கேட்பதில்லை. பில் தொகை அளிக்கின்றனர். கலபுரகி மாநகராட்சி துணை கமிஷனர் ஜாதவை துாக்கி எறிய வேண்டும். இவர் அனைத்து அரசுகள் காலத்திலும் இருக்கிறார். ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us