ADDED : மே 04, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையைச் சேர்ந்த 43 வயதான நபருக்கு, 14 வயதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். தற்போது சிறுமியின் குடும்பத்தினர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கின்றனர். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. பத்தனம்திட்டா போலீசார் விசாரணையில், சிறுமியின் தந்தையே மகளை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவரது தந்தையை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.