sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 'டிஜிட்டல்' மயமாகிறது உர மானிய திட்டம்

/

 'டிஜிட்டல்' மயமாகிறது உர மானிய திட்டம்

 'டிஜிட்டல்' மயமாகிறது உர மானிய திட்டம்

 'டிஜிட்டல்' மயமாகிறது உர மானிய திட்டம்


ADDED : ஜன 03, 2026 03:12 AM

Google News

ADDED : ஜன 03, 2026 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் நாட்டின் விவசாயிகளுக்கு அளிக்கப்படும், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உர மானியங்களை, 'டிஜிட்டல்' முறையில் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த, 'இ - பில்' தளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

நம் விவசாயிகள், பயிர்களுக்கான உரங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க, குறைந்த விலையில் உரங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. இதற்கான உர மானிய தொகை, பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதற்காக ஆண்டுதோறும் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.

இதை, டிஜிட்டல் முறையில் செயல்படுத்த, ஒருங்கிணைந்த இ -- பில் தளத்தை மத்திய உரத்துறை அமைச்சர் நட்டா டில்லியில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகை யில், ''உர மானியங்களை வெளிப்படையான முறையில் செயல்படுத்த அரசுக்கு இத்திட்டம் உதவும். உர மானியங்களுக்கான பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவுவதுடன், தணிக்கைகளையும் எளிதாக்கும். இதுதவிர, முறையாக பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் கண்காணித்து, வலுப்படுத்தவும் இந்த தளம் உதவும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us