டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு
டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு
UPDATED : ஜூன் 28, 2024 07:47 PM
ADDED : ஜூன் 28, 2024 07:07 PM

புதுடில்லி: டில்லியில் கனமழையால் விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
தலைநகர் புதுடில்லியில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இரவு பெய்ய துவங்கிய மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் கனமழை காரணமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததில் ஒரு பலியானார். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார்களும் பலத்த சேதமடைந்தன.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது டில்லி போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டெர்மினல் 1 பகுதியில் விமான சேவை நிறுத்தப்பட்டது.