sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

/

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து


ADDED : பிப் 08, 2025 01:40 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹா கும்ப நகர் உத்தர பிரதேசத்தில் மஹா கும்பமேளா நடைபெறும் இடத்தில், நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது.

இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர்.

மஹா கும்பமேளா நடைபெறும் பகுதியில், கிருஷ்ணர் வழிபாட்டுக்கான சர்வதேச சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில், நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

உடனே, சம்பவ இடத்திற்கு 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

காற்று வேகமாக வீசியதால், அருகில் உள்ள முகாம்களுக்கும் தீ பரவியது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு, காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதமாகின.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் இதேபோல் மஹா கும்பமேளாவில், செக்டார் 19ல் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் சேதமடைந்தன.

ஆன்லைன் வகுப்புகள்

மஹா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்களின் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கிடையே, வரும் 12ம் தேதி பவுர்ணமி தினத்தையொட்டி, பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பிரயாக்ராஜ் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும், நேற்று முதல் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதே நிலை, வரும் 12ம் தேதி வரை நீடிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us