ADDED : ஜன 14, 2026 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பற்றிய தீ, மளமளவென பல இடங்களுக்கும் பரவியது. 22 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர்.
வடக்கு டில்லியின் நரேலா தொழில்பேட்டை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பிடித்ததாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு, 15 வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர்.
எனினும், பக்கத்து கட்டடங்களுக்கும் தீ வேகமாக பரவியதால், கூடுதல் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதையடுத்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை வீரர்கள் அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசாருடன் தீயணைப்பு வீரர்கள் விசாரித்து வருகின்றனர்.

