உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 09, 2025 09:25 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:பதே நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, ஐந்து வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சேத மதிப்பு குறித்து மதிப்பீடு செய்யும் பணி நடகிறது.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தீப்பற்றியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
