sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

/

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி


ADDED : அக் 19, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''தீபாவளி பண்டிகைக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை விதித்துள்ளார்.

பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க மாநில அரசு, நேரம் நிர்ணயித்துள்ளது. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மக்கள் பின்பற்ற வேண்டும்.

பட்டாசுகள் வெடிப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கின்றன. சில இடங்களில் உயிரிழப்பும் நடந்துள்ளது. சிறார்கள் பார்வையை இழந்துள்ளனர். பட்டாசுகளால் சுற்றுச்சூழலும் பாழாகிறது.

இருளில் இருந்து, ஒளியை நோக்கிச் செல்லும்போது, சுற்றுச்சூழலை அசுத்தமாக்கக் கூடாது. ரசாயனம் அல்லாத பசுமை பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இது குறித்து பட்டாசு விற்போரிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us