ADDED : செப் 24, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட்: ஹூப்பள்ளியில் நேற்று முன்தினம் அதி காலையில், லாரியை வழிமறித்து, ஓட்டுனரிடம் இருந்து 20,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போன்றவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
பெண்டிகேரி போலீசில், லாரி ஓட்டுனர் கொடுத்த புகாரின்படி, வினோத், 28, என்பவரை கைது செய்தனர். கூட்டாளிகள் இருக்கும் இடத்தை அறிய தரிஹாலா பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கினார்.
தற்காப்புக்காக, வினோத் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

