sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

/

இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

15


ADDED : ஜன 08, 2025 10:04 PM

Google News

ADDED : ஜன 08, 2025 10:04 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' 40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் விமானப்படைக்கு வந்து சேரவில்லை,'' என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார். இந்த விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு 2009- 2010 ல் ஒப்பந்தம் போடப்பட்டது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. விமானப்படையில் பயன்பாட்டில் இருந்த மிக் 21 போர் விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் விமானப்படை தளபதி ஏபி சிங் பேசியதாவது: தேஜஸ் போர் விமானத்தை விமானப்படையில் சேர்ப்பது என 1984 ல் முடிவு செய்யப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்து, அவை 2001 ல் அந்த விமானங்கள் பறந்தன. பிறகு 2016 ல் அவை விமானப்படையில் இணைக்கப்பட்டன. ஆனால், அதில் இன்னும் 40 விமானங்கள் விமானப்படைக்கு வரவில்லை. இதுதான் நமது உற்பத்தி திறன்.

நாம் ஏதாவது செய்ய வேண்டும். நமக்கு போட்டி இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பல போட்டியாளர்கள் இருந்தால் தான் பணிகள் நடக்கும். இல்லையென்றால் எதுவும் மாறாது.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்கும் செய்யாவிட்டால், அது பொருத்தம் இல்லாததுஆகிவிடும். காலம் முக்கியமானது. தோல்வி இருக்கலாம். ஆனால், அதனை கண்டு அஞ்சக்கூடாது. தோல்வியை கண்டு அஞ்சிக் கொண்டு நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். நேரம் மிகவும் முக்கியமான துறைகளில் பாதுகாப்பு துறையும் ஒன்று. நாம் குறிப்பிட்ட காலக்கெடுவை எட்டாவிட்டால், தொழில்நுட்பத்தால் எந்த பயனும் இருக்காது.

நமது தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர அதைக் கண்டு பயப்படக்கூடாது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி 5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதனை பாதுகாப்பு பட்ஜெட்டில் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எந்த நாடும் செய்யாத வகையில், சீனா 6வது தலைமுறை போர் விமானத்தை சோதித்த நிலையில், தேஜஸ் போர் விமானங்கள் பற்றாக்குறை குறித்து இந்திய விமானப்படை தளபதி பேசி உள்ளார்.






      Dinamalar
      Follow us