sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்

/

பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்

பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்

பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்


ADDED : நவ 06, 2025 03:50 AM

Google News

ADDED : நவ 06, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில், 121 சட்ட சபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. அசம்பாவிதங்களை தடுக்க, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில், பீஹாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதற்காக மொத்தம், 45,341 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், 36,733 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில்

தொடர்ச்சி 2ம் பக்கம்






      Dinamalar
      Follow us