sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வினியோகம்

/

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வினியோகம்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வினியோகம்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வினியோகம்


ADDED : ஜூன் 09, 2025 02:53 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் என நம்பப்படும் மீன் மருந்து, மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஹைதராபாதைச் சேர்ந்த பாத்தினி குடும்பத்தினர் நுாறாண்டுகளாக, 'மீன் பிரசாதம்' எனப்படும் மீன் மருந்தை பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 'மிருகசீரிஷ கார்த்திகை' நாளில் இந்த மருந்து வழங்கப்படுகிறது. இதையொட்டி நேற்று மீன் மருந்து வழங்கும் நிகழ்வு ஹைதராபாதில் உள்ள பொருட்காட்சி திடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொன்னம் பிரபாகர், மாநில காங்., தலைவர் மகேஷ் குமார் கவுட் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

மீன் மருந்தை பெற நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் வந்திருந்தனர்.

அவர்களுக்கு மூலிகையுடன் கூடிய முரல் மீன் வழங்கப்பட்டது.

இந்த மருந்து குறித்த ரகசியத்தை துறவி ஒருவர் பாத்தினி குடும்பத்தினருக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது.






      Dinamalar
      Follow us