sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஏசி' இயந்திரம் வெடித்து ஐந்து பேர் காயம்

/

'ஏசி' இயந்திரம் வெடித்து ஐந்து பேர் காயம்

'ஏசி' இயந்திரம் வெடித்து ஐந்து பேர் காயம்

'ஏசி' இயந்திரம் வெடித்து ஐந்து பேர் காயம்


ADDED : செப் 09, 2025 11:05 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஏ.சி., இயந்திரத்தில் கம்ப்ரஷர் வெடித்து, ஐந்து பேர் காயமடைந்தனர்.

வடகிழக்கு டில்லியின் யமுனா விஹாரில் உள்ள, 'பீட்சா ஹட்' கடையில் நேற்று முன் தினம் இரவு ஏ.சி., இயந்திரத்தில் கம்ப்ரஷர் திடீரென வெடித்து தீப்பற்றியது. கடை ஊழியர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

பீட்சா ஹட் செய்தித் தொடர்பாளர் ரிதி கூறியதாவது:

எங்கள் கடையின் உள்பகுதியில் தீ விபத்து ஏற்படவில்லை. கடையின் வெளியே உள்ள பிரதான கட்டட வளாகத்தில் இருந்த ஏ.சி., இயந்திரம் நேற்று முன் தினம் இரவு, 9:00 மணிக்கு திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கடை ஊழியர்கள் துணிச்சலுடன் போராடினர். காயம் அடைந்த ஐந்து ஊழியர்கள், குருதேவ் பகதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பஜன்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us