sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

/

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

7


UPDATED : நவ 14, 2025 07:57 AM

ADDED : நவ 14, 2025 07:52 AM

Google News

7

UPDATED : நவ 14, 2025 07:57 AM ADDED : நவ 14, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புசம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆரிப் மிர்,32, ஹபூரில் உள்ள ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி டாக்டர் பரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஜமீல் என்பவர் அல் பலாஹ் பல்கலையில் ஊழியராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து டாக்டர்களை இந்தப் பல்கலையில் வேலைக்கு சேர்த்து விடும் பணியை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.

தற்போது 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றுள்ளனர். அனந்த்நாக்கைச் சேர்ந்த ஆரிப் மிர், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் தொடர்பில் இருந்தவர்.

இவரின் வீடுகளில் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபிக்கு சொந்தமாக காஷ்மீரில் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர்.






      Dinamalar
      Follow us