sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய பட்ஜெட்டிற்கு எப்.கே.சி.சி.ஐ., பாராட்டு

/

மத்திய பட்ஜெட்டிற்கு எப்.கே.சி.சி.ஐ., பாராட்டு

மத்திய பட்ஜெட்டிற்கு எப்.கே.சி.சி.ஐ., பாராட்டு

மத்திய பட்ஜெட்டிற்கு எப்.கே.சி.சி.ஐ., பாராட்டு


ADDED : பிப் 02, 2025 08:33 AM

Google News

ADDED : பிப் 02, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'மத்திய பட்ஜெட் திட்டங்கள் பாராட்டுக்குரியது' என, எப்.கே.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் குறித்து எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடகா வணிக மற்றும் தொழில்துறை அறப்பணிகள் கூட்டமைப்பு தலைவர் எம்.ஜி. பாலகிருஷ்ணா அளித்த பேட்டி:

மத்திய பட்ஜெட்டில் விவசாயம், சிறு தொழில், கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில் துறை வளர்ச்சி, தொழில் முனைவோருக்கு பெரிதும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்த பட்ஜெட், கர்நாடகாவின் தொழில் துறை, வர்த்தக துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர், வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக உள்ளது. கல்விக்காக 500 கோடி ரூபாய் செலவில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த திட்டம்; முதல் முறையாக ஐந்து லட்சம் தொழில் முனைவோருக்கு, 2 கோடி ரூபாய் அளவில் கடன் வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

துணைத்தலைவர் உமா ரெட்டி உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us