sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்

/

டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்

டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்

டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்


ADDED : செப் 06, 2011 11:47 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பானஜி: குவைத்தில் இருந்து கோவாவிற்கு, நேற்று வந்த ஏர்-இந்தியா விமானம், தரையிறங்கும் போது டயர்கள் வெடித்தன.

இருந்த போதிலும், 105 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குவைத்தில் இருந்து கோவாவிற்கு நேற்று, 105 பயணிகளுடன் ஏர்-இந்தியா விமானம் வந்தது. கோவா விமான நிலையத்தில், காலை 8 மணிக்கு தரை இறங்க முயன்ற போது, விமானத்தின் டயர்கள் வெடித்தன. இருந்த போதிலும், விமானம் பாதுகாப்பாக டாக்சிவே பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து, ஏர்-இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமானத்தின் டயர்கள் வெடித்தாலும், விமானத்தில் இருந்த 105 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த விமான பயணிகள், சென்னை செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்' என்றார். கடந்த வாரம், 104 பயணிகளுடன் மும்பை வந்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்க முயன்ற போது, ஓடு பாதையில் இருந்து விலகி சகதியில் சிக்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us