ADDED : செப் 23, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பீஹாரில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பஹல்பூர் மாவட்டத்தில் பாலத்தை தொட்டபடி வெள்ளம் செல்வதால், கிழக்கு மத்திய ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது.
பீஹாரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கை உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்கிறது.
இதையடுத்து, பீஹாரின் பஹல்பூர் மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - ரத்தன்பூர் நிலையங்கள் இடையே உள்ள பாலத்தை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், இந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜமால்பூர் - பாகல்பூர் பிரிவு வழியாகச் செல்லும் ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.