sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சி.ஏ.ஏ., சட்டத்தில் அசாமில் முதல் முறையாக வங்கதேச பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

/

 சி.ஏ.ஏ., சட்டத்தில் அசாமில் முதல் முறையாக வங்கதேச பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

 சி.ஏ.ஏ., சட்டத்தில் அசாமில் முதல் முறையாக வங்கதேச பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

 சி.ஏ.ஏ., சட்டத்தில் அசாமில் முதல் முறையாக வங்கதேச பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

6


UPDATED : டிச 14, 2025 07:07 AM

ADDED : டிச 14, 2025 06:56 AM

Google News

UPDATED : டிச 14, 2025 07:07 AM ADDED : டிச 14, 2025 06:56 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: அசாமில் வசிக்கும் வங்கதேசத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு மாநிலத்திலேயே முதல் முறையாக இந்தியக் குடிரியுமை வழங்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.

நிபந்தனைகள் இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட நம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

ஹிந்து, சீக்கியர், பவுத்தம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இதற்காக, 5 ஆண்டு காலம் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.

இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான அசாமின் சில்சாரைச் சேர்ந்த, 40 வயது வங்கதேச பெண், இந்தியக் குடியுரிமை கேட்டு கடந்தாண்டு விண்ணப்பித்திருந்தார். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சிட்டகாங்க் பகுதியை சேர்ந்த அவர், குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்காக, 2007ல் அசாம் வந்தார்.

நிராகரிப்பு ஸ்ரீபூமி நகரைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து இங்கேயே தங்கிவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்தாண்டு லோக்சபா தேர்தல் தொகுதி மறுவரையறை காரணமாக, இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து குடியுரிமை கேட்டு அவர் சார்பில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.

தற்போது , அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில், சி.ஏ.ஏ., சட்டத்தின் கீழ், இந்தியக் குடியுரிமை வழங்கப்படு வது இதுவே முதல் முறை. இதேபோல், அசாமின் கச்சாரில் வசிக்கும் வங்க தேசத்தை சேர்ந்த 61 வயது ஆண் ஒருவருக்கும் இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. அசாமைச் சேர்ந்த 40 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.






      Dinamalar
      Follow us