sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாகச பயணத்தை விரும்பும் வெளிநாட்டு பயணிகள்

/

சாகச பயணத்தை விரும்பும் வெளிநாட்டு பயணிகள்

சாகச பயணத்தை விரும்பும் வெளிநாட்டு பயணிகள்

சாகச பயணத்தை விரும்பும் வெளிநாட்டு பயணிகள்


ADDED : நவ 01, 2024 04:16 AM

Google News

ADDED : நவ 01, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் சாகச சுற்றுலாவில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூணாறில் பருவ மழை முடிந்ததும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும். அப்போது நிலவும் குளிரை அனுபவிக்க பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் அளவில் வந்து செல்வர். கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.

அதிகரிப்பு:இந்தாண்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்பெயின், லண்டன் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குழுக்களாக அதிகம் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இஸ்ரேல் நாட்டு பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என்ற போதும், அங்கு கடந்தஓராண்டுக்கு மேலாக போர் நடப்பதால் ஒரு பயணி கூட வரவில்லை.

சாகச பயணம்:மூணாறுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ட்ரெக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட சாகச சுற்றுலாவில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாகனங்களில் செல்வதை பெரும்பாலும் தவிர்ப்பதால்சாகச சுற்றுலாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us