sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

/

ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

31


ADDED : டிச 07, 2024 02:08 AM

Google News

ADDED : டிச 07, 2024 02:08 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரத்,குஜராத்தில் 70,000 ரூபாய்க்கு போலி மருத்துவ டிகிரி விநியோகித்த கும்பல் மற்றும் அந்த டிகிரியை வைத்து கிளினிக் நடத்திய 14 போலி டாக்டர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

குஜராத்தின் சூரத் நகரில், போலி மருத்துவ டிகிரி வைத்து, மூன்று பேர் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களின் கிளினிக்குகளில் சோதனை நடத்தினர்.

அவர்களிடம் மருத்துவ சான்றிதழை காட்டும்படி கேட்டதற்கு, 'எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம்' என்ற பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழைக் காட்டி உள்ளனர். ஆனால், அதுபோன்ற படிப்பே குஜராத்தில் இல்லை என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் ரமேஷ் என்பவர் 70,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, இந்த சான்றிதழ்களை வழங்கியதாகவும், இதை வைத்து ஹோமியோபதி, அலோபதி, ஆயுர்வேத மருத்துவம் பார்க்கலாம், எந்த பிரச்னையும் வராது என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் வினியோகித்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு என்று எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாததை அறிந்த ரமேஷ், அந்த படிப்பின் பெயரில் ஒரு மருத்துவ வாரியத்தை அமைத்து, 15 நாட்களுக்குள் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார்.

அவரிடம் சான்றிதழ் பெற்று கிளினிக் நடத்தி வந்த 14 போலி டாக்டர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ சான்றிதழ் பெற அவர் ஏற்படுத்திய மருத்துவ வாரியத்தில் 1,200 பேர் பதிவு செய்திருப்பது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us