sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி சிம்கார்டு பயன்படுத்தி ரூ.80 லட்சம் மோசடி

/

போலி சிம்கார்டு பயன்படுத்தி ரூ.80 லட்சம் மோசடி

போலி சிம்கார்டு பயன்படுத்தி ரூ.80 லட்சம் மோசடி

போலி சிம்கார்டு பயன்படுத்தி ரூ.80 லட்சம் மோசடி


ADDED : பிப் 23, 2024 12:33 PM

Google News

ADDED : பிப் 23, 2024 12:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்:உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஒருவர், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார்.

அதில் பேஸ்புக் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 20ம் தேதி முடாசிர் மிர்சா என்ற முக்கிய குற்றவாளியை டில்லியில் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 3,000 போலி சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது:

போலி சிம்கார்டுகளை பயன்படுத்தி மிர்சா தலைமையிலான கும்பல் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது. போலி நிறுவனத்தின் பெயரில் அந்த கும்பல் 29,000 ஏர்டெல் சிம்கார்டுகளையும், 16,000 வோடாபோன், ஐடியா சிம்கார்டுகளையும் வினியோகித்துள்ளனர்.

இணையதளம் வாயிலாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களிடம் மோசடியில் ஈடுபட, இந்த போலி சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட் டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us