sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விபத்தில் காயம் அடைந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம்; மத்திய அரசு அறிவிப்பு

/

விபத்தில் காயம் அடைந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம்; மத்திய அரசு அறிவிப்பு

விபத்தில் காயம் அடைந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம்; மத்திய அரசு அறிவிப்பு

விபத்தில் காயம் அடைந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம்; மத்திய அரசு அறிவிப்பு

13


ADDED : மே 06, 2025 02:28 PM

Google News

ADDED : மே 06, 2025 02:28 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்து தொடர்பான வழக்கில் அண்மையில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்புடன் சில கருத்துகளை கூறி இருந்தது. கடந்த சில மாதங்கள் முன்பு பணமில்லா சிகிச்சை திட்டம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.

இந் நிலையில், நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விபத்து நிகழ்ந்த நாள் முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.

2030க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் இலக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us