sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண்களுக்கு மாதம் ரூ.2,100, அக்னிவீரர்களுக்கு அரசு வேலை: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., தாராளம்!

/

பெண்களுக்கு மாதம் ரூ.2,100, அக்னிவீரர்களுக்கு அரசு வேலை: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., தாராளம்!

பெண்களுக்கு மாதம் ரூ.2,100, அக்னிவீரர்களுக்கு அரசு வேலை: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., தாராளம்!

பெண்களுக்கு மாதம் ரூ.2,100, அக்னிவீரர்களுக்கு அரசு வேலை: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., தாராளம்!

21


ADDED : செப் 19, 2024 01:58 PM

Google News

ADDED : செப் 19, 2024 01:58 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: 'ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 நிதி வழங்குவோம். அக்னிவீரர்களுக்கு அரசு வேலை வழங்குவோம்' என பா.ஜ., வாக்குறுதி அளித்து உள்ளது.

ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நட்டா வெளியிட்டார்.



வாக்குறுதிகள் என்னென்ன?


* ஹரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2100 உதவித்தொகை வழங்கப்படும்.

* அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.

* தெற்கு ஹரியானாவில் சர்வதேச அளவிலான ஆரவல்லி வன சபாரி பூங்கா அமைக்கப்படும்.

* தொழிற்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

* ஹரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும்.

* காங்கிரஸ் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் அறிவித்த நிலையில் பா.ஜ., ரூ.2,100 என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சேவை!

நிகழச்சியில் நட்டா பேசியதாவது: காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று காகிதம். அவர்கள் கடமைக்காக வாக்குறுதிகளை வெளியிடுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது?

அவர்களது ஆட்சி நில மோசடிகளுக்கு பெயர் பெற்றது. நாங்கள் ஹரியானா மக்களுக்கு இடைவிடாமல் சேவை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us