sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி விசா மோசடி வழக்கு தலைமறைவு ஏஜன்ட் கைது

/

போலி விசா மோசடி வழக்கு தலைமறைவு ஏஜன்ட் கைது

போலி விசா மோசடி வழக்கு தலைமறைவு ஏஜன்ட் கைது

போலி விசா மோசடி வழக்கு தலைமறைவு ஏஜன்ட் கைது


ADDED : ஏப் 03, 2025 07:39 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிபால்பூர்: போலி போலந்து விசா மோசடி விவகாரத்தில் ஹரியானாவைச் சேர்ந்த ஏஜன்ட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2021 செப்டம்பர் 6ம் தேதி டில்லி விமான நிலையத்துக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தர் பிரகாஷ், 22, சரப்ஜீத், 23, ஆகிய இரு பயணியர், போலந்து நாட்டுக்கு விமானத்தில் ஏறுவதற்காக சோதனை பகுதிக்கு வந்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்தது, போலி விசா என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு போலி விசா தயாரித்துக் கொடுத்ததாக குல்விந்தர் என்ற ஏஜன்ட் கைது செய்யப்பட்டார்.

போலந்து வழியாக போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்ல, குல்விந்தருக்கு பயணியர் இருவரும் தலா 3 லட்ச ரூபாய் கொடுத்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலம், குருஷேத்திராவைச் சேர்ந்த ககன்தீப் சிங், 36, என்ற ஏஜன்ட்டை போலீசார் தேடி வந்தனர்.

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அமிர்தசரஸ் நகரில் தலைமறைவாக இருந்த ககன்தீப்பை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

ககன்தீப் மீது ஏற்கனவே இரண்டு விசா மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us