sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛பாதி விலைக்கு ஸ்கூட்டர்..' 48,000 பேரை ஏமாற்றி ரூ.281 கோடி சுருட்டிய கும்பல்

/

‛பாதி விலைக்கு ஸ்கூட்டர்..' 48,000 பேரை ஏமாற்றி ரூ.281 கோடி சுருட்டிய கும்பல்

‛பாதி விலைக்கு ஸ்கூட்டர்..' 48,000 பேரை ஏமாற்றி ரூ.281 கோடி சுருட்டிய கும்பல்

‛பாதி விலைக்கு ஸ்கூட்டர்..' 48,000 பேரை ஏமாற்றி ரூ.281 கோடி சுருட்டிய கும்பல்

2


ADDED : மார் 18, 2025 03:06 AM

Google News

ADDED : மார் 18, 2025 03:06 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : ''பாதி விலைக்கு ஸ்கூட்டர் தருவதாக சொல்லி, 48,000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, 281 கோடி ரூபாயை சுருட்டியவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என, கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார்.

கேரள சட்டசபையில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முரளி பெருநெல்லி, கேட்ட கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: முக்கியமான நிறுவனங்கள், தங்களின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகப் பணிகளுக்காக ஒதுக்குவது, சி.எஸ்.ஆர்., எனப்படும் கம்பெனி சமூக பொறுப்புடைமை நிதி என அழைக்கப்படுகிறது. கேரளாவில் இந்த விவகாரத்தில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துஉள்ளன.

கடந்த 12ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்த, சி.எஸ்.ஆர்., முறைகேடு தொடர்பாக, 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆதாரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி, அதற்கு, சி.எஸ்.ஆர்., எனும் கம்பெனி பொறுப்புத் திட்டத்தை கூறி, 48,386 பேரை இந்த கும்பல் ஏமாற்றி உள்ளது. இதன் வாயிலாக, 281.43 கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். 16,348 பேருக்கு மட்டும் பாதி விலையில் ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளனர்.

அதுபோல, குறைந்த விலைக்கு லேப் - டாப் தருவதாக கூறி, 36,891 பேரிடம் இருந்து 9.22 கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். அவர்களில், 29,897 பேருக்கு மட்டுமே லேப் - டாப்களை வழங்கிஉள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us