sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் டாக்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'; ரூ.3 கோடி 'அபேஸ்' செய்த கும்பல்

/

பெண் டாக்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'; ரூ.3 கோடி 'அபேஸ்' செய்த கும்பல்

பெண் டாக்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'; ரூ.3 கோடி 'அபேஸ்' செய்த கும்பல்

பெண் டாக்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'; ரூ.3 கோடி 'அபேஸ்' செய்த கும்பல்

2


ADDED : ஜூன் 29, 2025 04:55 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 04:55 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' முறையில் 70 வயது பெண் டாக்டரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், 70 வயது பெண் டாக்டர் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை தொலைத்தொடர்பு ஊழியர் அமித் குமார் என அறிமுகம் செய்து கொண்டார். டாக்டரின் பெயரில் உள்ள சிம் கார்டு வாயிலாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு எண்ணில் இருந்து குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சமதன் பவார் என்ற பெயரில் பெண் டாக்டரிடம் ஒருவர் பேசினார். அப்போது, பணமோசடி வழக்கில் சிக்கிய விமான நிறுவன உரிமையாளர் வீட்டில் நடத்திய ரெய்டில் தங்களின் வங்கி விபரங்கள், டெபிட் கார்டு உள்ளிட்டவை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

அத்துடன், அதுதொடர்பான சி.பி.ஐ., அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் உண்மையான ஆவணங்கள் போன்றவற்றை பெண் டாக்டருக்கு அடுத்தடுத்து அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த டாக்டரின் மொபைல் போனிற்கு, வீடியோ அழைப்பு வாயிலாக மற்றொரு நபர் பேசினார். போலீஸ் சீருடையில் பேசிய அந்நபர், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை போல் பெண் டாக்டரை நம்ப வைத்துள்ளார்.

இதையடுத்து, அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாகவும், ஒவ்வொரு மணி நேரமும் தங்கள் முன் வீடியோ கால் வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சம் அடைந்த டாக்டர், அந்நபரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து எட்டு நாட்கள் அதேபோல் இருந்துள்ளார். அப்போது, அவர்கள் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மூன்று கோடி ரூபாயை டாக்டர் அனுப்பினார். ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த டாக்டர், மும்பை சைபர் கிரைம் போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார்.

இதன்படி வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், 82 லட்சம் ரூபாயை கிரிப்டோகரன்சியாக அக்குற்றவாளி மாற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சைபர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us