ADDED : ஏப் 02, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதுக்கு நண்பர் ஒருவரை பார்க்க கடந்த மாதம், 4ம் தேதி, வந்தார்.
அந்த பெண், அவருடன் வந்த மேலும் சிலரும், ஹைதராபாதைச் சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் டாக்சியில் சென்றனர். சுற்றி பார்த்து முடிந்ததும், மற்றவர்கள் டாக்சியிலிருந்து இறங்கிச் சென்றனர். அந்த பெண் மட்டும் தனியே டாக்சியில் இருந்தார்.
தனியே இருந்த அந்த பெண்ணை, டாக்சிக்குள்ளேயே, டிரைவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின் தப்பியோடினார். இந்த மோசமான சம்பவம் குறித்து, போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். தப்பியோடிய டாக்சி டிரைவரை போலீசார், கைது செய்தனர்.

