ADDED : மார் 16, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:பாலக்காடு அருகே எலி மருந்து பேஸ்டை பயன்படுத்தி பல் துலக்கியதால், 3 வயது சிறுமி உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி ஜெல்லிப்பறை ஒம்மலை பகுதியைச் சேர்ந்த லிதின் - -ஜோமரியா தம்பதியின் 3 வயது மகள் நேஹா ரோஸ். பிப்., 21ல் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, எலி மருந்து பேஸ்டை எடுத்து, தவறுதலாக பல் துலக்கியுள்ளார்.
இதைக்கண்ட பெற்றோர், சிறுமியை உடனடியாக, கோட்டயம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி, நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசித்ரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.