இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வைத்து ரோட்டில் வீச்சு
இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வைத்து ரோட்டில் வீச்சு
ADDED : செப் 21, 2011 11:37 PM

பெங்களூரு: இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து, ரோட்டோரத்தில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு கெம்பே கவுடா நகர் அபூர்வா லே -அவுட் அருகில் ரோட்டின் ஓரத்தில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், வெடிகுண்டாக இருக்குமோ என பயந்து, அருகில் செல்ல தயங்கினர். ஒரு சிலர் அருகில் சென்று பார்த்தனர். சூட்கேஸ் ஓரத்தில் ரத்தம் வடிந்திருந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து, அப்பகுதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில், 20 வயதுள்ள இளம்பெண் ஒருவரின் பிணம் கிடந்தது. சூட்கேசில் வைப்பதற்கு ஏற்றவாறு, உடலை இரண்டாக வெட்டி, கால்களை மடக்கி அடைத்து வைத்திருந்தனர். இதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பிணத்தை அடையாளம் காட்டுமாறு அருகில் இருந்தவர்களை போலீசார் அழைத்தனர். அவர்கள் யாரும் வரவில்லை. இப்பெண், உள்ளூரை சேர்ந்தவரா, வெளியூரை சேர்ந்தவரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.