sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

/

நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

17


ADDED : ஆக 19, 2024 01:34 PM

Google News

ADDED : ஆக 19, 2024 01:34 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மிரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கொலை


கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை பாலியல் பாலத்காரம் செய்து, கால் எலும்பை முறித்து, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

போராட்டம்


நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிக்கை


இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நம்பிக்கையில்லை


முன்னதாக, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தை, 'முதலில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது இல்லை. இந்த சம்பவத்தில் அவர் நினைத்திருந்தால், பொறுப்பேற்று செயல்பட்டிருக்கலாம். ஆனால், அவர் ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறியிருந்தார். இது ஆளுங்கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இருந்தது.

விரல்களை துண்டிப்பேன்


மேலும், 'இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கைகளை உயர்த்தினால், அவர்களின் கை விரல்களை துண்டிப்பேன்' என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் பெங்கல் உதயன் குஹா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மிரட்டல்


இந்த நிலையில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., அரூப் சக்ரபோர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

டாக்டர்களின் போராட்டம் குறித்து பேசிய அவர், 'நீங்கள் வீட்டுக்கு போங்க அல்லது உங்களின் ஆண் நண்பருடன் எங்க வேண்டுமானாலும் போங்க. ஆனால், உங்கள் போராட்டத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்தாலும், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அப்போது, உங்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம்,' எனக் கூறினார்.

எரிச்சல்

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us