sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

/

ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்


ADDED : டிச 24, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், மாநில அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உயர்மட்ட கமிட்டி கூட்டம், பெங்களூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 9,823.31 கோடி ரூபாய் செலவிலான தொழில் முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:

டி.என்.சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஐ.டி.ஐ.ஆர்., தேவனஹள்ளியில், 998 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 467 வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு கிளஸ்டர் தொழிலில், 3,425 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மைசூரின் கோச்சனஹள்ளியில் 60 கோடி ரூபாய், ஹாரோஹள்ளியில், சம்செரா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின், 2,150 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.

சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் துணை உற்பத்தி பொருட்களில், விவசாயிகளுக்கு பங்கு கொடுப்பது குறித்து ஆய்வு செய்யும்படியும், இவ்விஷயத்தில் தமிழகம், மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் துவங்க, கே.ஐ.ஏ.டி.பி.,யிடம் நிலம் பெற்று, தொழில் துவங்காவிட்டால் அபராதம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விதிகளின் படி, ஆலைகள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us