sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மங்களூரு - கார்கலா இடையே அரசு பஸ் இயக்கம்

/

மங்களூரு - கார்கலா இடையே அரசு பஸ் இயக்கம்

மங்களூரு - கார்கலா இடையே அரசு பஸ் இயக்கம்

மங்களூரு - கார்கலா இடையே அரசு பஸ் இயக்கம்


ADDED : டிச 14, 2024 11:22 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுதந்திரத்துக்கு பின், முதன் முறையாக மங்களூரு - கார்கலா இடையிலான நெடுஞ்சாலை, அரசு பஸ்சை பார்த்து உள்ளது. 'சக்தி' திட்டமே இதற்கு காரணம்.

தட்சிண கன்னடா, மங்களூரில் இருந்து, கார்காலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, அரசு பஸ்களையே கண்டதில்லை. பல அரசுகள் மாறியும், இப்பகுதிக்கு அரசு பஸ்களை இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

தனியார் பஸ்கள் மட்டுமே இப்பகுதியில் இயங்கி வந்தன. அரசு பஸ் வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் கனவாகும்.

காங்கிரஸ் அரசு, பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கும் 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய போது, இப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அரசு பஸ்கள் இயங்காத காரணத்தால், சக்தி திட்ட சலுகை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை.

இச்சூழ்நிலையை சாதகமாக்கி, தனியார் பஸ் உரிமையாளர்கள், மனம் போனபடி கட்டணம் வசூலித்தனர். இதை தவிர்க்கும் வகையில், மங்களூரு - கார்கலா நெடுஞ்சாலையில், அரசு பஸ்களை இயக்கும்படி வலியுறுத்தி வந்தனர். தற்போது இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்க, போக்குவரத்து துறை மனம் வைத்தது. பஸ்களின் போக்குவரத்தும் துவங்கியுள்ளது.

'சக்தி' திட்டம், கர்நாடக காங்கிரஸ் அரசின் முக்கியமான திட்டமாகும். இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பெண்கள் தங்கள் குடும்பத்துடன், உற்சாகமாக சுற்றுலா, தீர்த்த யாத்திரை செல்கின்றனர். ஆனால் தட்சிண கன்னடாவின், சில பகுதிகளின் பெண்கள், தங்களுக்கு இந்த சலுகை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தனர்.

மங்களூரு - கார்கலா நெடுஞ்சாலையில், பஸ்களை இயக்குவது குறித்து, தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அரசு பஸ்களை இயக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

இதற்கிடையே தற்காலிகமாக கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் போக்குவரத்தை துவக்கியது. மங்களூரில் இருந்து, கார்காலுக்கு இரண்டு பஸ்களும்; கார்காலில் இருந்து மங்களூருக்கு இரண்டு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்கு பின், இந்த வழித்தடத்தில் முதன் முறையாக அரசு பஸ் தலை காட்டியுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள கார்கலா, மூடுபிதரே, கைகம்பா பகுதிகளின் பெண்கள் குஷி அடைந்துள்ளனர்.

தனியார் பஸ் நிறுவனங்களின் நெருக்கடியால், இப்பாதையில் அரசு பஸ் போக்குவரத்து துவங்க, மாவட்ட நிர்வாகம் உட்பட, உயர் அதிகாரிகள் தயங்கினர். ஆனால் கே.எஸ்.ஆர்.டி.சி., மாவட்ட அதிகாரி ராஜேஷ் ஷெட்டியின் தொடர் முயற்சியால் இப்பாதையில், அரசு பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணியரிடம் அமோக வரவேற்பு கிடைப்பதால், கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us